ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்டுள்ள

ஊழல் கட்சிகள் தங்களுக்குள் போட்டுக் கொண்டுள்ள வியாபார பங்கீடு மட்டுமே தேர்தலில் அரங்கேறும். இதில் எங்களது கட்சி பங்கேற்றால், அதனால் கிட்டக்கூடிய முன்னேற்றம் சொற்பமானதே.

மக்கள் நலன் நோக்கிய பயணமாக இந்த உள்ளாட்சித் தேர்தல் இருக்கப் போவதில்லை. 2021 இல் ஆட்சியை பிடிப்பதே நம் இலட்சியம் என்றால் வெற்றி நிச்சயம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தலிலும், அண்மையில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை.
இந்த நிலையில், விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலிலும் அக்கட்சி போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.