உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிலைப்பாட்டை மையமாக வைத்து, நடிகர் ரஜினியை அமைச்சர் ஜெயக்குமார் கலாய்த்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தின் நிலைப்பாட்டை, அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக விமர்சித்துள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக, வரும் 27, 30 ஆம் தேதிகளில் (டிசம்பர் 27,30) தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டிருந்தார். இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை (திங்கள்கிழமை) தொடங்கவுள்ளது.
இன்னும் அரசியல் கட்சி தொடங்காத சூழலில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.