உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா என்பது குறித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிலைப்பாட்டை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தமது முடிவை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 27, 30 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. "இந்தத் தேர்தலில் யாருக்கும், எந்தக் கட்சிக்கும், ரஜினி மக்கள் மன்றம் ஆதரவு அளிக்காது" என நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரு கட்சிகள் ( திமுக, அதிமுக) எழுதி இயக்கும் நாடகமே உள்ளாட்சித் தேர்தல். இதில் மக்கள் நீதி மய்யம் எந்தப் பாத்திரத்தையும் ஏற்க போவதில்லை.